சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினம், வைர விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே, காமராஜர்-சிவானந்தா சாலை சந்திப்பில் ஒரு இடமும், அண்ணா சாலையில் ஒரு இடமும், ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டன. இந்த 4 இடங்களில் ஒரு இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் காமராஜர் சாலை மற்றும் சிவானந்தா சாலை சந்திப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்தார். இப்பணிகளை மேற்கொள்ள வசதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1.83 கோடி பொதுப்பணித்துறையின் பராமரிப்பு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.