ஆந்திர மாநில த்தில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய 11 பேர் கைது

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 2 சக்கர வாகனங்களை திருடிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனங்களை திருடிய கும்பல் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகத்தில் விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்தூர் மாவட்ட எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் போலீசார் 107 இருசக்கர வாகனங்கள், ஒரு டிரக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: