தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி பட்டியல் நாளை வெளியீடு: தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி பட்டியல் நாளை வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச்செயலாளர், பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிப்போருக்கான தமிழ்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிவுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, 03.08.2021 அன்று வெளியிடப்படுகிறது.

இவ்வாக்காளர் பட்டியல் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, இரண்டாவது தளம், தலைமைச் செயலகம், சென்னை-600 009, முதன்மைச் செயல் அலுவலர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், சென்னை-600001 மற்றும் அனைத்து மண்டல வக்ஃபு கண்காணிப்பாளர்களின் அலுவலகங்கள் ஆகியவற்றில்  வெளியிடப்படுகிறது. 2. தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். தேர்தல் பற்றிய அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் தேர்தல் அதிகாரியால் வெளியிடப்படும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: