சென்னை: சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல போலீசார் அனுமதிக்கமாட்டார்கள்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார். கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடற்கரைக்கு செல்ல அனுமதியில்லை என தகவல் தெரிவித்தார். அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வௌியே வர வேண்டும். திருமணங்களில் சாப்பிடும் போதும் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என கூறினார்.