வீட்டை உடைத்து 24 சவரன் கொள்ளை

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 24 சவரன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளைடித்து சென்றனர்.  கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கம் சொக்காத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (33). சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் டெவலப்பராக வேலை செய்கிறார். இவரது மனைவி மம்தா (29). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.  கடந்த 28ம் தேதி கார்த்திக், குடும்பத்துடன் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் கேட் மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 24 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2,500 ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடிக்கப்பட்ட பகுதியில் இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: