சென்னை: தமிழக பாஜ மீனவர் அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மீனவர் அணி தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் வி.பி.துரைசாமி, பொது செயலாளர் கருநாகராஜன், மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், வழக்கறிஞர் அணி தலைவர் பால்கனகராஜ் மற்றும் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கழுத்தில் மீன் வலையை தொங்க விட்டப்படி கலந்து கொண்டனர்.