சென்னை: காஞ்சிபுரம் மளிகைசெட்டி தெருவை சேர்ந்தவர் நவ்ஷத் (40). ஆட்டோ டிரைவர். கடந்த 2008ம் ஆண்டு சித்தேரி மேடு பகுதியை சேர்ந்த ரேவதியை (35), காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ரேவதி, இஸ்லாமிய மதத்துக்கு மாறி, தனது பெயரை ரஷிதா என மாற்றி கொண்டார். இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நவ்ஷத் தினமும் வேலை முடிந்து வீடு திரும்பும் போது, மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் நவ்ஷத், போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த மரம் வெட்டும் கத்தியால் ரஷிதாவை வெட்ட முயன்றார்.