ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையால் பப்பாளி வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான கணவாய் மலைப்பகுதி, திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, கணேசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் பப்பாளி விவசாயம் நடக்கிறது.