பந்தலூர் : பந்தலூர் அருகே பெருங்கரை கொற்றிக்கல் பழங்குடியினர் கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், கடந்த மார்ச் 25ம் தேதி இரண்டு பேரை காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இப்பகுதிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் மண்டி கிடப்பதால் யானை நடமாட்டம் தெரிவதில்லை. அதனால்தான், யானை- மனித மோதலாகி உயிரிழப்பு ஏற்பட்டது. எனவே, அப்பகுதிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.