சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை சிஐடி நகரை சேர்ந்த ஸ்ரீதரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்ட பிரிவினரை தவிர மற்றவர்கள் கருவறைக்குள் செல்வது ஆகம விதிகளுக்கு முரணானது என்பதால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.