சென்னை : கோவில்களுக்கு காணிக்கையாக வந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் எந்த பயமுமின்றி தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கோவில்களுக்கு காணிக்கையாக வந்த 2000 கிலோ தங்கம் பயனின்றி உள்ளது. அவற்றை வைப்பு நிதியாக வைத்து அதில் வரும் வட்டியை கோவில் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு முறையாக கும்பாபிஷேகம் நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 180 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.