கோவை: கோவையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமுடன் வரும் மக்கள் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கோவை ஊரக பகுதிகளில் 26 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களிலும் தினமும் தலா 250 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆர்வமுடன் வரும் மக்கள் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.