சென்னை : ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 5 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். ஆடவர் பிரிவில் ஆரோக்கியராஜ், நாகநாதன் பாண்டியனும் கலப்பு ஓட்டத்தில் தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். திருச்சியை சேர்ந்த தனலட்சுமி, பயிற்சி செலவுகளை கூட சமாளிக்க முடியாத நிலையிலும் அயராது உழைத்து ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ளார். அதே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுபா வெங்கடேசனும் மிகுந்த வறுமையிலும் ஒலிம்பிக்கில் கால் பதித்துள்ளார்.