மே 10 முதல் விண்ணப்பித்த 3 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரமின்றி அவற்றை பெற்றுக்கொள்ளலாம். ஜூன் 15-ம் தேதி முதல் இந்த மாத இறுதிவரை அவற்றை பெற்றுக்கொள்ளலாம். அவற்றை பெறும்போது ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. மேலும் புதிதாக ரேஷன் அட்டை பதிவு செய்தவர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கொரோனா நிவாண தொகை மற்றும் மளிகை பொருட்களை பெற்றும் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ளலாம் என கால அவகாசம் நீட்டித்து அரசு கூறியுள்ளது.