சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் முறைகேடாக ஒதுக்கப்பட்ட 660 சாலை புனரமைப்பு ஒப்பந்தங்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தலின் போது நடத்தை விதிமுறைகளை மீறி சென்னையில் உள்ள 3,200 சாலைகள் புனரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒப்பந்தம் அளிக்கப்பட்ட சாலைகளின் தரத்தை ஆய்விட்டு விவரங்களை அளிக்க மண்டல துணை ஆணையாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டு இருந்தார்.