பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே 25 லட்சம் ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டனர்.திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணராஜகுப்பம் அருகில், அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்வதாக வருவாய் துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில், வருவாய் துறையினர், அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, 25 லட்சம் மதிப்பிலான இரண்டரை ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தது தெரிந்தது.