சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் தான் ஒரே வழி என்பதால் தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி குறித்து மக்களிடையே பயம் இருந்ததால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டினார்கள். அதன்பிறகு தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.ஆனால் மத்திய அரசிடம் இருந்து போதிய அளவு தடுப்பூசி வழங்காததால் அவ்வப்போது தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு தடுப்பூசிகள் வந்த பிறகு போடப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 1,88,23,296 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதைப்போன்று சென்னை மாநகராட்சி சார்பில் 45 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசியும் போடு பணி நடைபெற்று வருகிறது. அதைப்போன்று சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 21ம் தேதி 19,878 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 28,90,251 பேர் தடுப்பூசி போடப்பட்டது.