திருவொற்றியூர்: மணலி அருகே சேலைவாயல் பகுதியில் 8 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது அதை ஆர்.டி.சேகர் எம்எல்ஏ துவக்கி வைத்தார். மணலி பிரதான சாலை சேலைவாயல் பகுதியை ஒட்டி உள்ள கோவிந்தசாமிதெரு, முனுசாமி தெரு போன்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம், வியாசர்பாடி மின் கோட்டம் சார்பில் சேலைவாயல் பகுதியில் ரூ. 8 லட்சம் செலவில் புதிய மின் மாற்றி மற்றும் மின் கேபிள்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. பணிகள் முடிவடைந்ததை ஒட்டி இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.