சென்னை: வயிற்று வலி காரணமாக வாலிபர் ஒருவர் நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை போலீசார் விரைந்து செயல்பட்டு உயிருடன் மீட்டனர்.சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் நேற்று மாலை திடீரென கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கூவம் ஆற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபரை மீட்க முயன்றனர். ஆனால் வாலிபர் ஆற்றில் உள்ள சேற்றில் சிக்கியதால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.