கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் அருகே குப்பை ஒன்றில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தையை வளர்க்க முடியாதவர்கள் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்துவிடலாம் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி குழந்தை இல்லாத பலர், பல இடங்களில் குழந்தை திருட்டிலும் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று குழந்தைக்காக ஏங்கும் நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை குப்பையில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.