கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த சில வாரங்களில் தொடங்கவுள்ளது. அதற்குள்ளாக கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்த்தப்படவில்லை என்றால் தகுதியுள்ள பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியாத நிலை ஏற்படும். எனவே, கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும். கிரீமிலேயர் வருமான வரம்பை கணக்கிடுவதில் விவசாயம் மற்றும் சம்பள வருவாய் சேர்த்துக் கொள்ளப்படாது என்றும் ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்.

Related Stories: