முக்கிய செய்தி சென்னை சொத்துக்கள் முறையாக வாங்கியுள்ளாரா என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. விசாரணை Jul 22, 2021 சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராமசந்திரன் விசாரணை நடத்தி வருகின்றனர். பதவியில் இருந்த காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் டெண்டர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சொத்துக்கள் முறையாக வாங்கியுள்ளாரா என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தவதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் சாயப்பட்டறை உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள எம்.ஆா்.விஜயபாஸ்கர் வீடு, காரிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தமாக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அப்போது, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக இன்று காலை முதல் அவருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி: திருப்பூர் மாவட்டம் முதலிடம்; வழக்கம்போல் மாணவிகள் அசத்தல்
இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது ஜனநாயகத்தையும் நமது அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்: ராகுல் காந்தி
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!: குமரியில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா
சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொதுதீட்சிதர் குழு தடுக்கிறது: ஐகோர்ட்டில் அறங்காவலர் குற்றச்சாட்டு
சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்குநேரி மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து..!!
தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு