சென்னை: சென்னையை அழகாக்கும் விதமாக வாகன கழிவுகளால் உருவாக்கப்படும் 14 வகையான சிற்பங்களை சென்னை மாநகராட்சி உருவாக்கி வருகிறது. வழக்குகளில் சிக்கிய வாகன கழிவுகள் மற்றும் புதுப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி வாகனங்கள் பழுது நீக்கும் நிலையங்களில் உள்ள காலவதியான வாகன கழிவுகளில் மீன், நண்டு, ஜல்லிக்கட்டு காளை, பரதநாட்டியம், மிருதங்கம், இறால், விவசாயி உள்பட 14 வகையான சிற்பங்களை வடிவமைக்க சென்னை மாநகராட்சியால் திட்டமிடப்பட்டு, அந்த பணிகள் திருவான்மியூரில் நடைபெற்றது. இப்போது சென்னை மெரினா கடற்கரையில் புல் வெளிகளில் மீன், நண்டு, இறால் உள்ளிட்ட 3 அழகான பிரம்மாண்ட உலோக சிற்பங்கள் வைக்கும் பணி நடந்து வருகிறது.