காஞ்சிபுரம்: புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் பல்வேறு குளறுபடி உள்ளதாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு ஓய்வுபெற்றஅரசு ஊழியர் சங்க காஞ்சி மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருவேங்கடம் தலைமைதாங்கினார். மாவட்ட செயலாளர் பிச்சை லிங்கம் செயல் அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட ஆர்த்தி, எஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்ட சுதாகர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். குறிப்பாக புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் சுமார் 8 லட்சம் ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தில் மாதம் 350 வசூலிக்கப்படுகிறது.