மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வடுகப்பட்டி வடக்கு வீதியை சேர்ந்த புவனேஸ்வரி (35). இவரது கணவர் குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து வடுகபட்டியில் உள்ள வீட்டை பட்டா மாறுதல் செய்வதற்காக புவனேஸ்வரி வடுகபட்டி ஏ. கிராம விஏஓ வெற்றிவேலை அணுகினார். அப்போது பட்டா மாறுதல் செய்து தருவதற்கு வெற்றிவேல் ரூ. 40 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். பேரம் பேசி இறுதியாக ரூ.30 ஆயிரம் தருவதாக பேசப்பட்டது. இதனையடுத்து ரூ.19 ஆயிரம் பணத்தை புவனேஸ்வரி கொடுத்துள்ளார். மீதித் தொகையை கேட்டு அடிக்கடி புவனேஸ்வரியை வெற்றிவேல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.