காஸ் கசிந்து தீ விபத்து மேலும் ஒருவர் பலி

சென்னை: திருவல்லிக்கேணி தேவராஜன் தெருவை ேசர்ந்தவர் அப்துல் ரஹிம்(58). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 16ம் தேதி காலை மனைவி பாத்திமா பேகம்(52), மகன் நஹித்(22) அகியோருடன் தூங்கி கொண்டிருந்தார். பிறகு பாத்திமா பேகம் எழுந்து கணவர் மற்றும் மகனுக்கு டீ போட சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது சமையல் காஸ் கசிந்து இருப்பது தெரியாமல் அடுப்பை பற்ற வைத்துள்ளார். இதில் பாத்திமா பேகம் மற்றும் அறையில் தூங்கி கொண்டிருந்த அப்துல் ரஹிம், மகன் நஹித் ஆகியோர் மீது தீ பிடித்து எரிந்தது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.

பின்னர் காயமடைந்த 3 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பாத்திமா பேகம் அவரது மகன் நஹிம் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அப்துல் ரஹிம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜாம்பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: