நெல்லூர்: ஆந்திராவில் பொதுமக்களிடம் 10,000 போலி கோழி முட்டைகளை விற்பனை செய்துவிட்டு தப்பியோடிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வரிகுண்டப்பாடு மண்டலத்தில் மினி லாரி ஒன்று நேற்று காலை ஊர் ஊராக முட்டை விற்பனை செய்திருக்கிறது. குறைந்த விலைக்கு தருவதாக கூறியதால் ஏராளமானோர் முட்டைகளை வாங்கி சென்றிருக்கின்றனர். 30 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டி 130 ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கின்றனர். இதனால் ஒருமணி நேரத்தில் அனைத்து முட்டைகளும் விற்று தீர்த்திருக்கின்றனர்.