சென்னை: தியாக திருநாள் என்று இஸ்லாமியர்களால் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி சென்னை பல்லாவரத்தில் குர்பானி கிடா ஆடுகளின் விற்பனை களைக்கட்டியிருக்கிறது. எந்தவிதமான குறைபாடுகளும் இன்றி இறைச்சிக்காகவே வளர்க்கப்படும் குர்பானி கிடா ஆடுகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லவரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றை பக்ரீத் பண்டிகைக்காக இஸ்லாமியர் வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டை விட குர்பானி ஆடுகளின் விலை ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.