ஆவடி: ஆவடி மாநகராட்சி 3வது வார்டில் பிருந்தாவன் நகர் அமைந்துள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட வீடுகளில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் குறைந்த மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். தற்போது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசரிடம், அப்பகுதி மக்கள் குறைந்த மின்சார பிரச்னையை தீர்க்க வலியுறுத்தினர். இதனையடுத்து, அவர் பிருந்தாவன் நகருக்கு வந்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தார். பின்னர், அங்கு அவர் கூடுதலாக ஒரு மின்மாற்றி அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சமீபத்தில் அங்கு புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனை நேற்று காலை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.