சென்னை: தலைமை செயலகத்தில் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில், தகவல் தொழில்நுட்ப துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, இணையத்தை தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துகளிலும் பரவலாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கிராமங்களில் கூட தகவல் தொழில்நுட்பம் சார்ந்து பிபிஓ நிறுவனங்களை தொடங்க முடியும். மேலும், நகர்புறங்களில் இணைய சேவை தடையின்றி கிடைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.