இசையமைப்பாளர் முரளிதரன் மரணம்

சென்னை: திரைப்பட இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன் உடல் நலக்குறைவால் காலமானார். சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் இசையமைப்பாளர் முரளிதரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னையில் அவர் நேற்றுமுன்தினம் காலமானார். ஸ்ரீ படத்தில் ‘வசந்தசேனா வசந்தசேனா’ என்ற பாடல் மிகவும் பிரபலம். கோத்தம் என்கிற இந்தி படம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் விக்ரம் - மீனா பாடிய ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார். இரண்டே பேர் நடித்த, வித்தையடி நானுனக்கு என்ற படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

Related Stories: