சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கணக்கு தணிக்கை அறிக்கையில் இழப்பு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதால் விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் எனவும் ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.