சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து 11 மருத்துவக்கல்லூரி, 5 கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் முடிக்கப்படுவது எப்போது? என்பது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளிப்படையாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுப்பணித்துறையில் நடக்கும் முக்கிய திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்டுமான பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தார்.
மேலும், இது தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் தரமான பணிகளை விரைவாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார். இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பணிகளை எப்போது முடிக்கப்படும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதே போன்று ரூ.82 கோடியில் தேனி கால்நடை கல்லூரி, ரூ.82 கோடியில் உடுமலைப்பேட்டை கல்லூரி கட்டிடம், கீழ்ப்பாக்கம், கோவை, மதுரை மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம், திருச்சி, கோவை தகவல் தொழில்நுட்ப கட்டிடம், ராமநாதபுரம், தேனி, சேலம் அரசு சட்டக்கல்லூரி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் எப்போது முடியும் என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் நடந்து வரும் பணிகள் முடிப்பது எப்போது என்று அறிவித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
* 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்மாவட்டம் மதிப்பு பணி முடியும் தேதிவிருதுநகர் ரூ.380 கோடி 15.10.2021 நாமக்கல் ரூ.338.76 கோடி 30.09.2021திருப்பூர் ரூ.336 கோடி 14.12.2021நாகை ரூ.366.85 கோடி 02.12.2021கிருஷ்ணகிரி ரூ.338 கோடி 15.10.2021திண்டுக்கல் ரூ.327 கோடி 08.12.2021ராமநாதபுரம் ரூ.345 கோடி 31.12.2021திருவள்ளூர் ரூ.385 கோடி 31.06.2022கள்ளக்குறிச்சி ரூ.381 கோடி 31.07.2022அரியலூர் ரூ.347 கோடி 31.01.2022ஊட்டி ரூ.447 கோடி 20.09.2022* 5 மாவட்ட கலெக்டர் அலுவலக பணிகள்மாவட்டம் மதிப்பு பணி முடியும் தேதிசெங்கல்பட்டு ரூ.119 கோடி 16.04.2022 திருப்பத்தூர் ரூ.109 கோடி 17.07.2022 கள்ளக்குறிச்சி ரூ.104 கோடி 21.10.2022 ராணிப்பேட்டை ரூ.118 கோடி 27.04.2022தென்காசி ரூ.119 கோடி 27.08.2022