3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அரசு உத்தரவு

சென்னை: நில நிர்வாகம், மீன்வளத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நிலநிர்வாக கூடுதல் ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, மீன்வளத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மீன்வளத்துறை ஆணையராக இருந்த கருணாகரன், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக இருந்த அதுல் ஆனந்த், தொழிலாளர் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை கூடுதல் இயக்குனர் சரவணன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: