சென்னை: கோகுல மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் எம்வி.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நதிநீர் பிரச்னை ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்னையாகும். இது ஒரு அரசியல் சார்ந்த பிரச்னையல்ல. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை. எட்டு கோடி தமிழர்களின் உணர்வில் கலந்த வாழ்வியல் பிரச்னையாகும். ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஒற்றுமையாக இணைந்து மத்திய அரசிற்கு எடுத்து சொல்ல வேண்டிய நேரம் இது. தமிழக அரசு சட்டமன்றத்தில் தமிழக விவசாயிகள் நலன் மற்றும் தமிழக மக்கள் நலன் கருதி நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசுக்கு கொண்டு சென்று இத்தீர்மானம் வெற்றியடைய தமிழக முதல்வருக்கு கோகுல மக்கள் கட்சி என்றும் துணை நிற்கும்.