சென்னை: சென்னை மாநகர அரசு குற்றவியல் தலைமை வக்கீலாக ஜி.தேவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகரம் முழுவதும் உள்ள குற்ற வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற வளாகத்தில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் 7 கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களுக்கு அரசு தரப்பில் ஆஜராக வக்கீல்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், மாநகர அரசு குற்றவியல் தலைமை வக்கீலாக ஜி.தேவராஜனை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.