ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் தென்னாப்பிரிக்காவில் தவிக்கும் தமிழர்களை பாதுகாக்க வேண்டும்

சென்னை: தென்னாப்பிரிக்காவில் தவிக்கும் தமிழர்கள் உட்பட இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் கலவரங்களால் அங்கு பெருமளவில் வாழ்ந்துவரும் தமிழர்கள் உட்பட இந்தியர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகின்றனர். எனவே இத்தகைய நிலையை கருத்தில் கொண்டு  தென்னாப்பிரிக்கா அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி  அங்கு வாழும் தமிழர்கள் உள்பட இந்தியர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளித்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: