சென்னை ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் தென்னாப்பிரிக்காவில் தவிக்கும் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் Jul 17, 2021 முதல் அமைச்சர் யூனியன் அமைச்சர் தமிழர்கள் தென் ஆப்பிரிக்கா சென்னை: தென்னாப்பிரிக்காவில் தவிக்கும் தமிழர்கள் உட்பட இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் கலவரங்களால் அங்கு பெருமளவில் வாழ்ந்துவரும் தமிழர்கள் உட்பட இந்தியர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகின்றனர். எனவே இத்தகைய நிலையை கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்கா அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அங்கு வாழும் தமிழர்கள் உள்பட இந்தியர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளித்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்