சென்னை: பெங்களூரு-சென்னை சதாப்தி அதிவிரைவு ரயில்கள் வரும் 21ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பயணிகள் வருகை குறைந்ததால் நாட்டில் பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், ஏராளமான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது. இதேபோல பயணிகள் வருகை குறைவால் நிறுத்தப்பட்டிருந்த கே.எஸ்.ஆர். பெங்களூரு- எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் சதாப்தி அதிவிரைவு ரயில்கள் (வண்டி எண்: 02028/02027) இருமார்க்கமாகவும் வருகிற 21ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.