சென்னை சிறப்பாக பணியாற்றிய 646 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்: கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார் Jul 16, 2021 ஆணையாளர் சங்கர் ஜிவால் சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 646 காவலர்களுக்கு ‘தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்’ வழங்கி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கவுரவித்தார். சென்னையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு, \”தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்\” வழங்கும் விழா, எழும்பூர் ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சென்னை மத்திய குற்றபிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை நுண்ணரிவு பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு, முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவு, மோப்ப நாய் படை, நவீன காவல் கட்டுப்பாட்டறை, விபச்சார தடுப்பு பிரிவு, பணியிடை பயிற்சி மையம், சிறுவர் நல காவல் பிரிவு, போதை பொருள் தடுப்பு பிரிவு, ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை, தனிப்பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு ஆகிய காவல் பிரிவுகளில் கடந்த 10 ஆண்டுகள் துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கபடாமல் சிறப்பாக பணியாற்றிய ஆண், பெண் உள்ளிட்ட 646 காவலர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. அதில், 597 காவலர்களுக்கு நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சிக்கு வர முடியாதவர்களுக்கு அந்தந்த காவல் நிலையங்கள் மூலம் விருது வழங்கப்படும், என அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் கண்ணன், செந்தில் குமார், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பிரதீப் குமார், மத்தியகுற்றபிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசியதாவது: ‘மாநகர காவல் துறையில் கடந்த 10 ஆண்டு காலமாக எந்த தவறும் இழைக்காத காவலர்களுக்கு இன்று பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று அனைத்து காவலர்களும் சிறப்பாக பணியாற்றி பதக்கங்கள் பெற வேண்டும். காவல்துறையில் உயரிய பதவியில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து நிலை காவலர்களும் ஒன்றிணைந்து உழைத்தால் தான் காவல்துறைக்கு இன்னும் சிறப்பு பெயர் கிடைக்கும். கொரோனா சூழ்நிலையில் காவலர்கள் உடல்நலம் மட்டுமில்லாமல் மன உறுதியோடு பணியாற்ற வேண்டும். மாநகர காவல் துறையில் 95 சதவிகிதம் காவலர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் அனைத்து காவலர்களும் சிறப்பாக பணியாற்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் தகவல்
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது