சென்னை அடையாறு திருவிக பாலம் அருகே ஆயில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து Jul 16, 2021 அடையார் பாலம் சென்னை: மேடவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து சோப்பு தயாரிக்க பயன்படுத்தும் ஆயிலை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு அடையாறு துர்கா பாய் தேஷ்முக் சாலையில் டேங்கர் லாரி ஒன்று வந்தது. அடையாறு திருவிக பாலத்தை கடந்து, வளைவில் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டேங்கரில் இருந்த ஆயில் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. லாரியில் சிக்கி ஓட்டுனர் ராம்லால் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் ஓட்டுனரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ராட்சத கிரேன் மூலம் லாரியை அகற்றினர். சாலையில் பரவிய ஆயிலை துப்புரவு தொழிலாளர்கள் உதவியுடன் அகற்றினர். இதனால் அப்பகுதியில் நேற்று அதிகாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுனர் மது அருந்தி இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து அவர்மீது போலீசார் மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்