சென்னை 119வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை Jul 16, 2021 முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் காமராஜ் சென்னை: காமராஜரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காமராஜரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், வெள்ளக்கோவில் சாமிநாதன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் எம்எல்ஏக்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமாகா தலைவர் ஜிகே.வாசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தி.நகரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதிமுக பொதுச்செயலாளர் சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஆட்சி மன்ற குழு செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்பு செயலாளர் வந்தியதேவன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், ராஜேந்திரன், மகேந்திரன், சைதை சுப்பிரமணி, பார்த்திபன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். கலைஞர் ஆட்சி காலத்தில்தான் கன்னியாகுமரி கடற்கரையில் காமராஜருக்கு மணிமண்டபமும் உருவாக்கினார். சென்னையில் உள்ள கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயர் சூட்டப்பட்டதோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கும் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்பட்டு 20.08.1975ல் திறந்து வைக்கப்பட்டது.
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் தகவல்
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது