சென்னை தோல்வியிலிருந்துதான் வெற்றி பிறக்கிறது: மநீம தொழிற்சங்கம் துவக்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு Jul 16, 2021 கமல்ஹாசன் மணிமா யூனியன் சென்னை: கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நம்மவர் தொழிற்சங்க பேரவை என்ற பெயரில் தொழிற்சங்கம் தொடங்கினார். இதன் துவக்க விழா மற்றும் அறிமுக விழா நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.இந்த விழாவில் தொழிற்சங்கத்தின் பெயரை வெளியிட்டு அதன் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். முடிவில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக காமராஜரின் 119வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர்தூவி கமல் மரியாதை செய்தார். பின்னர் 119 நலிந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர் பேசியதாவது:தோல்வியை கண்டு பயப்பட வேண்டும் என்பார்கள். என் தோல்விக்கு இத்தனை பேர் வருந்திப் பார்த்ததில்லை. ஒரு தோல்வியிலிருந்துதான் ஒரு வெற்றி பிறக்கிறது. இதைத்தான் சரித்திரம் சொல்கிறது. இந்த கட்சி ஆரம்பிக்கும் முன்பே தொழிற்சங்கம் அமைக்கும் எண்ணம் என் மனதில் இருந்தது. இப்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்