புழல்: சோழவரம் அருகே எருமைவெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக மணல் திருட்டு நடைபெறுவதாக நேற்று முன் தினம் சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனையடுத்து, நேற்று முன் தினம் மாலை, சோழவரம் எஸ்எஸ்ஐ கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு ஒரு லாரியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும், மணல் அள்ளிய கூலி தொழிலாளர்கள், லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர், அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.