திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. குறிப்பாக இளம் பெண்கள் பலர் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொள்வது தொடர் கதையாகிவிட்டது. இந்த நிலையில் கேரளாவில் பெண்களுக்கு நடக்கும் குற்றங்களுக்கு எதிராகவும், பெண் பாதுகாப்பை வலியுறுத்தியும் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். கவர்னரின் இந்த திடீர் அறிவிப்பு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.