ரயிலில் பயணி தவறவிட்ட 20 சவரன் ஒப்படைப்பு

சென்னை: தாம்பரத்தில் இருந்து பல்லாவரம், பரங்கிமலை, நங்கநல்லூர், கிண்டி, தி.நகர், எழும்பூர், சேத்துப்பட்டு, பார்க் ஸ்டேசன் வழியாக சென்னை கடற்கரைக்கு தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று காலை 8 மணியளவில் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஜானகீஸ்வரி மற்றும் அவருடைய கணவர் இரண்டு பேரும் அம்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் வந்தனர். அப்போது ரயிலில் தங்களது பையை மறந்துவிட்டனர். அதில் 20 சவரன் மற்றும் அடையாள அட்டைகள் இருந்தது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த பையை, நகையுடன் மீட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: