திருவனந்தபுரம்: இந்தியாவில் முதன் முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்ட வூகானில் இருந்து திரும்பி வந்த திருச்சூர் மாணவிக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனாவின் பிறப்பிடமாக சீனாவின் உகான் கருதப்படுகிறது. இங்கிருந்து தான் கொரோனா உலகம் முழுவதும் பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது. உகானில் கொரோனா பரவியதை தொடர்ந்து அங்கிருந்த வெளிநாட்டினர் வெளியேறினர். அப்போது, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒரு மாணவி உகானில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார்.