சென்னை: தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் டெல்லியில் பாஜ மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து ெபற்றார். இந்த நிலையில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை வருகிற 16ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்கிறார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தேசிய இணை பொறுப்பாளர் டாக்டர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாநில தலைவரை தலைவர் இருக்கையில் அமரச் செய்து பொறுப்பேற்க செய்கின்றனர்.