சென்னை: ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு வீரர்களின் வாரிசுதாரர்களை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.