காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேசன் கூறியதாவது. வியாச மகரிஷி உட்பட தங்களது குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கவும்,தங்களது ஆன்மிக பலத்தை பெருக்கி கொள்ளவும் சந்தியாசிகளால் கடைப்பிடிக்கப்படும் விரதமே சாதுர்மாஸ்ய விரதமாகும். இந்த விரத காலங்களில் சந்நியாசிகள் ஏதேனும் ஒரு இடத்தில் தங்கி தியானம்,ஜெபம் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மரபுப்படி காஞ்சி சங்கராச்சியார் விஜயேந்திர ஆண்டு தோறும் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிப்பது வழக்கம்.இதையொட்டி, இந்தாண்டுக்கான விஜயேந்திரரர் சாதுர்மாஸ்ய விரதம் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவரின் சதாப்தி மணிமண்டபத்தில் இம்மாதம் 24ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 20ம் தேதி பௌர்ணமியுடன் நிறைவு பெறுகிறது.