சென்னை: சென்னை தேனாம்பேட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனராக அலுவலக வளாகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை முடுக்கிவிட்டுள்ளது. ஜிகா வைரஸை கண்டறிய வழக்கமான எலிசா பரிசோதனையை தொடர்ந்து ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மூலமும் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை நல்வாழ்வுத்துறை எடுத்து வருகிறது.